கந்தகத்தீயில் கரைந்தோம்!!!
கனவினை துறந்து
உரிமையை இழந்தோம்
உறவுகளைப் பிரிந்து
அகதிகளாய் வாழ்ந்தோம்!!!
உறுப்புகளை இழந்து
வீதியில் கிடந்தோம்
நெருப்பினில் நடந்து
கந்தகத்தீயில் கரைந்தோம்!!!
இத்தனை துன்பத்தையும்
எத்தனை வரிகொண்டு வடித்தாலும்
அத்தனையும் மாண்டு போன
நம் உறவுகளுக்கு ஈடாகாது!!!
நி.கண்ணன் கமுதி