உதிரங்கள் கரைந்தோடிய ஈழ தேசமே ……!
உதிரங்கள் கரைந்தோடிய ஈழ தேசமே
துயரங்கள் நிறைந்தாடிய தாய் மடியே
அவலங்கள் அரங்கேறிய வீர நிலமே
உயிர்களைப் பந்தாடிய முள்ளிவாய்க்கால் மண்ணே
பத்து ஆண்டுகள் கடந்தாலும்
வலிகள் இன்னும் ஆறலையே
செத்து மடிந்த நாட்கள் தானே
இன்றும் நிழலாடுகிறது வாழ்வினிலே
விதைத்த உயிர்கள் முளைக்கும் என்றோம்
புதைந்த உறவுகள் தானே புதைகுழிகளில் தெரிகிறார்கள்
நீதி ஓர் நாள் நிலைக்கும் என்றோம் …
அநீதி தானே தொடர்கதையாய் நீள்கிறது
இறந்தவர் குரல்கள் இங்கே இதயத்தை கிழிக்கிறது
இழந்தவர் கண்ணீரும் தேசத்தை நனைக்கிறது
இருக்கின்ற உயிர்களையும் வாழ்வாதாரம் வதைக்கிறது
இல்லாத உறவுகளைத் தானே தேடித் தேடி அலைகிறது
தேடித் திரியும் உறவுகளும் நாளை .
இல்லை என்ற நிலை வரலாம்
மடிந்தவர் என்றே நினைத்தவர்கள் நாளை
மறுபடியும் எமக்காய்ப் பிறந்திடலாம்
சாகத் துணிந்தவர் சந்ததிகள் எம்மை
மீண்டும் வழி நடத்திச் சென்றிடலாம்
எமக்கு சாவை தந்த கயவர் நிலை
மீண்டும் பரிதாபம் ஆகிடலாம்
ஈகம் தழுவிய எம் வீரர்கள்
தாகம் நாளை தணிந்திடலாம் .
வேகம் கொண்டு வரிப் புலியாகி
முள்ளிவாய்க்கால் முடிச்சை தகர்திடலாம்
விடியும் அன்றே எம் ஈழம்
அவன் பாதம் பதியும் எம் தேசம்
எமை சூழ்ந்த அவலம் பொடியாகும்
முள்ளிவாய்க்கால் வலிகளின் உறுதியோடு
எஸ்.றதன் கார்த்திகா.