தமிழனை பிணமாக்க சிங்களமும் காந்தியமும் கை கோர்த்த இறுதி நாட்கள்
நீர் கொண்ட கடல் கரையிலும்
நீண்டு போய் கிடந்தது
எம் உறவுகளின் துயரங்கள்
மரணமோ ஓயாமல்
எம் உறவுகளை துரத்த
தமிழனை பிணமாக்க
சிங்களமும் காந்தியமும்
கை கோர்த்த இறுதி நாட்கள்
கடந்து போன எம் வாழ்வில்
சிதைக்க பட்ட எம் உறவுகளின்
உயிர்களை மண்ணோடு
புதைக்கும் முன்பே அடுத்த
விடியலும் தமிழனின் சாவு என
காலமும் விரைவாய்
ஓடியதே மாறி மாறி
ஒரு கூட்டு உறவுகளாய்
பிணைந்து வாழ்ந்த எம்மினம்
கொடிய அரக்கத்தின்
கொலை பசிக்கு இரையாக
முடிந்ததே சோகம்
உறவொன்று இடமொன்றாய்
படுப்பதற்கோர் இடமின்றி
அலைந்து திரியும்
பாவப்பட்ட நாய்போல
அச்சத்தின் ஆக்கிரமிப்பால்
உறவுகளின் பிரிவினால்
எப்படி வரும் எமக்கு நித்திரை
மூச்சு விடவே பயந்தோம்
வாழவே அச்சம் கொண்டோம்
முள்ளிவாய்க்கால் மண்ணோடு
அடங்கி போனது எம் வாழ்வு
விழுந்த எறிகணையில்
எம் உறவுகள் உயிர்கள் பிரிந்தது
உறவுகள் மட்டுமல்ல எங்கள்
விடுதலையின் வேட்க்கையும் தான்
முள்ளிவாய்க்கால் கடற்கரையோரம்
புதைந்தே போனது
=சிவா TE=