வைகாசி 18 மறந்து போகுமோ முள்ளிவாய்க்கால்….?

In தாயக கவிதைகள், முள்ளிவாய்கால் கவிதைகள்

வைகாசி 18 மறந்து போகுமோ முள்ளி வாய்க்கால்.?

ரத்தக் குருதியில் தோய்ந்து
ஒன்பது ஆண்டுகள் கடந்தாலும் ……!!
ரணங்கள் இன்னும் ஆறாத மனங்களாய் ………!!
முள்ளிவாய்க்கால் தந்த பேரவலத்தை
மறந்து போகுமோ எம் நெஞ்சம் ……………????
சிதறிக்கிடந்த உடல்கள் நடுவே
சிவந்து போன எம் ஈழதேசத்து நாட்களை எண்ணி
அழுதிட கண்ணீரும் இல்லை …….!!
எழுதிட வார்த்தைகளும் இல்லை …..!!
கொத்துக் குண்டுகள் நடுவே
திசை தெரியாது சிதறி ஓடி …….!!
உடல் சிதறிய எம் உறவுகள் எத்தனை எத்தனையோ ……..????

கை இழந்து ,கால் இழந்து ,உயிரிழந்து ,உறவிழந்து
கற்பிழந்து கதறி அழுத அந்த வலி சுமந்த நாட்கள்
என்றும் நினைவு அழியா நெருப்புக்கள் ……….!!
சிங்களப் பேரினவாதமே………….!!
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல்
நீ தோற்றுப்போய் அடி வாங்கி ஓடிய நாட்கள் தான் அதிகம் …!!

அதனால் தான் என்னவோ , நீதி அற்ற உலக நாடிகளிடம்
பிச்சை கேட்டு எம் உறவுகளை – உன் கொத்துக் குண்டுகளுக்கு
இரையாக்கினாயோ ……………..????
பிஞ்சுகளையும், உறவுகளையும் நசுக்கி
எம் ரத்தம் குடித்து சித்தம் மகிழ்ந்த புத்தமே – இது கேள் ..!!

இன்று கருவிலேயே எம் குழந்தைகளுக்கு
உனை கருவறுக்கும் வீரத்தை விதைக்கின்றோமெடா …….!!

ஓர் நாள் உன் தூக்கத்தை நீ தொலைப்பாய்
அன்று உன் இனமே சின்னா பின்னமாய்
சிதறிக்கிடப்பதை நீயும் காண்பாய் ……….!!
அதுவரை எங்கள் இலட்சிய நெருப்பை
துரோகத்தால் கூட அணைத்துவிட முடியாது ……..!!****
முள்ளிவாய்க்காலில் எமை முடித்து விட்டாய் என்று
நீ எள்ளி நகையாடி ஏளனமாய் சிரித்தமைக்கு ……..!!
மௌனமாய் இன்று தலை குனிந்து நிற்கும் நந்திக்கடல்
நாளை உனக்குப் பதில் சொல்லுமெடா ……….!!
அணையாத எரிமலையாய் எம் கரிகாலன் – மீண்டும் வருவான்

எமை மீட்க வருவான் …………..!!
உன் இறுதி அத்தியாயத்தை எழுதாமல் – அவன்
ஒரு போதும் விழிமூட மாட்டான் …………….!!
பௌத்தமே இதை நீ நினைவில் வைத்துக்கொள் .
உணர்வுகொள் தமிழா ……..!!
செத்து மடிந்தது போதும் ..!!
முள்ளிவாய்க்கால் களம் உனை வா என்று
கூவி அழைக்குதெடா ………!!

அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு
இழந்த இழப்பை மீட்டெடுக்க மீண்டும் ஒரு களம் காண்போம் வா
அது முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளியிலிருந்தே தொடங்கட்டும்……….!!

துரோகத்தை சாய்த்து துணிவோடு புறப்படு தமிழா
படைத்திடு ஒரு வீர வரலாறு …
அமைத்திடு எமக்கான ஒரு தனி நாடு
எம் மாவீரச்செல்வங்களின் அழியாத கனவோடு
நாளைய வரலாறுகள் எம் தமிழீழத்தில் மலரட்டும் …………!!!!!

முள்ளிவாய்க்கால் வலி சுமந்த நினைவுகளோடு.

S.Rathan Karthika

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.