வதம் கொண்ட மாதம்
*************************
கடியதோர் கல்லும் முள்ளும்
கொடு விட அரவக்காடும்
நீர்சுனை ஆழிக்கரையும்
நிமிர்ந்திட முடியா குண்டால்
நீந்தியே நிலம் உருண்டோம்
எரிதணல் மேலும் நின்று
எறிகணை யாவும் கொண்டு
சுடுகுழல் சூழ நின்று
சுந்தர வன்னி மண்ணில்
கூடி நம் பகை எதிர்த்தோம்
அடிமைகள் வாழ்வு நீங்க
அமைதியாய் வம்சம் வாழ
எம் குடியது முழுகிடினும்
தேடி எம் பகை அழித்தோம்
காரிருள் சூழ்ந்ததன்று
கரும் புகை மேலெழுந்து
காற்றுடன் கலந்து போக
எங்கள் ஆட்டமும் அடங்கியது
அடிமை அத்தியாயம் தொடங்கியது….
….கவிப்புயல் சரண்….