முள்ளிவாய்க்கால்.
காலப் பெருவெளியில்
கரைந்து போகாத
ஈகத்தின் தாகம்
முள்ளிவாய்க்கால்.
கண்ணீராலும் – ஈழக்
காவிய இரத்தத்தினாலும்
சரிதம் எழுதி வைத்த வீரம்
முள்ளிவாய்க்கால்.
நெய்தலை நெருப்பாக்கி
நெஞ்சுர உணர்வாக்கி
சிவந்தெரிந்த யாக முகம்
முள்ளிவாய்க்கால்.
முழங்கிய ஓசைகளின்
மூர்க்கத்தில் நின்று
தலைகொடுத்தாடிய உயிர்ப்பு
முள்ளிவாய்க்கால்.
ஓலத்தின் ஓசையில்
ஓர்மத்தைப் பறையாக்கிய
ஒற்றைச் சொல்
முள்ளிவாய்க்கால்.
மூசிவரும் அலை கரையில்
மூச்சாலும் வீச்சாலும்
தீர்ப்பெழுதிய வீரப் புனிதம்
முள்ளிவாய்க்கால்….
கலைப்பரிதி.