மகிழ்ச்சி கொண்டு எழுதுகிறேன்
ஆனாலும் என் கண்களில் கண்ணீரை
மல்கியபடி !!!
ஊர்களை பறித்தாயே!
எம் உறவுகளை அழித்தாயே!!
பிணம் தின்னி வல்லரசே…!!
பிணவாடை கொடுத்தாயே!!
பதறி அழ வைத்தாயே..பிணம்
தின்னி .வல்லரசே…!!
கைதட்டி சிரித்தாயே !!
கடுகளவு கூட மக்கள் என்ற
எண்ணம் இல்லாமல் !
பிணம் தின்னி வல்லரசே..!!!
ஒன்று கூட்டி ஓங்கி ஒலித்த
எறிகணையில் கொத்து
குண்டை கொத்து கொத்தாய்
நீ இறக்கி கூண்டு கிளிகளை
கூண்டோடு அழித்தாயே.!!
பிணம் தின்னி வல்லரசே…!
வாங்குடா நல்லா வாங்கு !!
உன் மக்கள் படும் அவலம்
உன் காதில் கேட்குதல்லவா ??
பிணங்களை புதைக்கூட இடமின்றி
மருத்துவங்கள் செய்யக்கூட வழி
இன்றி பிச்சையா கேட்குறாய்??
பக்கத்து நாடுகளிடம்!!!
ஆயுத போர்கள் இன்றி எப்படி
வந்தது இத்தனை மரணம்
உனக்கு ?? சொல்வாயா?
எங்கள் மண்ணை கேட்டு போராடிய
எங்களை பயங்கரவாதி பட்டம் சூட்டி
கை குலுக்கியா? மகிழ்ந்தாய்??
பித்து பிடித்ததுபோல் கொட்டமடிக்குறாயா?
எங்கள் மக்கள் பட்ட துயரத்தில் நீ இன்னும்
அரைவாசிகூட அனுபவிக்கவில்லை !
இனியாவது உணர்ந்து கொள் !!!
எங்களின் சாவக்கேடு உன்னை
ஆட்டி வதைக்குது என்று!!
ஆமா கொரோணா நீ நல்லவனா???
கெட்டவனா??சொல்லிவிட்டு.
சென்றுவிடு!!!
பத்தாண்டு அவலத்தின் பின்
பதற பதற உயிர்களை காவு
கொண்டு போகிறாயே!!
நீ யார் என்பதை சொல்லி விட்டு
சென்று விடு !!!
எங்கள் இனத்தின் ஆத்மாக்கள்
என்று மட்டும் என்னால் உணர முடிகிறது
அப்படியே.வல்லாதிக்கத்தை வாரி விட்டு
சென்று விடு!!!
வலிகளின் வடுக்கள் மாறாத்துயரம்
என் நெஞ்சை உலுப்பியது ..மெய்
மறந்து எழுதி விட்டேன் !!