புதிய விடியல்….!
செழிப்புற்ற தேசமும்
சேற்றினில் புதைந்தது.
உழைக்கின்ற கரங்களும்
உருவிழந்து போனது.
சிரிக்கின்ற உதடுகள்
மௌனித்துக் கிடந்தது.
மிளிர்கின்ற பற்களும்
ஒளியற்றுப் போனது.
எமக்கிருந்த உரிமைத்தீ
அன்றே அணைக்கப்பட்டது.
குண்டு மழை வானிலிருந்து
குடியிருப்புகளில் கொட்டப்பட்டது.
தசைகளும் குருதியும்
விதைகள் என்றானது.
உயிர் பெற்ற உடல்களும்
துரோகத்தில் வீழ்ந்தது.
வளர்கின்ற மழலையும்
புதைகுழிப் பலியானது.
மனமோ வெறுத்து.
மடிவதே மேல் என்றது.
தியாகமோ மனங்களை
வென்று புகழினை சூடியது.
இழந்ததை மீட்டிடவேண்டி
எழுதுகோல் போர்க்கொடியானது.
பழையவை தீயினில்
கருகியே எரியட்டும்.
புதியவை பூக்களாய்
மனங்களில் மலரட்டும்.
புது விடியல் வாழ்வுதனை
செழிப்புற சூழட்டும்.
வன்னியூர் கிறுக்கன்