மறப்போமா வைகாசியை
**********
வைகாசி பதினெட்டு
வைகாசி பதினெட்டு
தமிழர்களின் மாதத்தில்
எப்போதும் ஒரு தீட்டு
குருவி கட்டிய கூட்டுக்குள்ள
கூடியிருந்த என் இனக் குலமொன்றை,
அணு அணுவாய் அகோரமாய்
கொன்று குவித்த பெரும் வேட்டு
இரத்தப்பேராறொன்றை
கண்முன்னே திணித்தவளே
கிழவி குமரி குழந்தைகளைக் கூட
கசாப்புக் கடையின் ஆடுகளைப் போல் கழுத்தறுத்து உருசித்தவளே
ஜயோஜயோ என்று நாமழுத வேளை யாருமிங்கே வருவாரென்று
நாம் நகர்த்தினோம் காலை
வந்தார்கள் கொன்றார்கள்
வன்புணர்ந்தார்கள் பாரதத்தின் சேனை தமிழீழத்தின் தேனை
கரிகாலன் படையெங்கும் தனியாக நின்றது உலகத்தின் படையெல்லாம் கூட்டாக வந்தது களமாடி களமாடி புலியெல்லாம் பலியாகிப் போனாலும்
தன்மானம் மண்டியிடாத வரலாற்றை
தமிழுக்கு தந்தது
வலிகளுக்கே வலிகளை உணர்த்திய
அந்தப் போர் நாளில் உதவிட யாருமற்ற ஓரினமாய் தமிழினம் துடித்தது
நீ நடந்திட வேண்டுமெனில்
நீதான் எழும்பிட வேண்டுமென்ற
நம்பிக்கை மீண்டும் ஒரு முறை
தலையில் உதித்தது
வைகாசியே வைகாசியே
நீ வெறும் ஒரு மாதமல்ல
வெற்றியை தோல்வியை துரோகத்தை உணர்த்திய பாடம்
படித்து வெடித்து துடித்து
உணர்ந்து விட்டோம்
ஏதோ ஒரு வைகாசியில் எங்களுக்கும் – ஒரு வசந்தம் வருமென்பதை அண்ணார்ந்து பார்த்தபடி…….
அல்வையூர் தாசன்
02.05.2020