பட்ட வேதனை கொஞ்சமோ
பல நாடுகளால் யாமும்….!
கூட்டி செல்ல வருவார் என்றிருந்தால்
கொத்து குண்டு போட்டனரே எம்மேல்
புலிகள் ஆள புதுமைகள் பல படைத்தோம்
திரட்டி கொண்டு வந்தனரே படைகளை பல நாடுகளும்..
அழும் மக்கள் ஆயிரமாயிரம் அன்று
ஆனால் ஆறுதல் கூறி தேற்றவும் தூக்கவும் யாருமில்லை எமக்கு
பெருமை பேசிய தாய் நிலதலைவர்கள்
மவுனம் காத்தனரே நாம் மரணிக்கையில்…
பிஞ்சி குழந்தை என்றும் பாராமல்
நஞ்சி காற்றை கொண்டு மரணிக்க செய்தனர்
விடிவு வருமோ எமக்கும்
வல்லாதிக்கலத்தின் பிடியில் இருந்து……
இங்ஙனம்
சோழன் கொற்றவை தேவன்