கொல்லுங்கள் அல்லது கொல்லப்படுவீர்கள்…!
என்ற கோட்பாட்டு
நிலையில் நாங்கள் பல
கொலைகளுக்கு
சொந்த காரர் தான்
நாம் சுடவில்லை என்றால் சிங்களம் எம் இனத்தை என்றோ அழித்துஇருக்கும்
எங்கள் சுடுகலனில் இருந்து செல்லும் ஒவ்வொரு சன்னமும் விடுதலை வேண்டியே இருந்தது .
அந்த கொலைகளை நாங்கள் விரும்பி ஏற்றோம்
ஒரு நாள் கூட நாம் கொலைகாரர் என்ற மனநிலைக்கு சென்றதே இல்லை
தலைவன் வளர்த்த விதம் தாய்வளர்ப்புக்கு
சமமானது .
இனம் காக்க தயார் செய்து எம்மை தமிழ் மீட்க அனுப்பி வைத்தான் .
சொல்லுக்கு முன் செயலாய் நின்றோம் களங்களில்
போர் தின்ற மக்களுக்கும்
வீரத்தின் விளை நிலமாம் ஈழத்துக்கும்
நிலம் மீள விழுந்த வேங்கைகளுக்கும்
நாம் சொல்ல விரும்புவது
எப்போதும்
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
கொண்ட கொள்கை உள்ளவரை புலி கோலம் மாற போவதில்லை
கவிப்புயல் சரண்