அன்று நாமும் எம் தேசமும்
உயிர் இருந்தும் நாங்கள்
உயிரற்ற உடல்களாய்
உணர்வுகள் இழந்து
நினைவழிய தேசமாய்
அடங்கிய வாழ்வில்
ஆறுதல் தேடுகின்றோம்
ஆண்ட தமிழனை அகதி என்றார்
சொந்த நாடு கூட வாடகை தேசமானது
எங்கள் மண்ணை கேட்டதினால்
உலகங்கள் கூடி பயங்கரவாதிகள் என்றது
சொல்வோர் சொற்கேட்க்க
செவிசாய்த்த உலகம் எம்மை
கொத்து கொத்தாய் கொன்று குவிக்க
கைகோர்த்து நின்றது
கொடுமைகளை எம் வாசலில் புகுத்தி
பகை செய்தான் நாசம்
எவ்வளவு சித்திரவதைகள்
எண்ணில் அடங்காத உயிர் பலிகள்
ஓலம் இட்டு அழுதனர் எம் உறவுகள்
அந்த கடலின் கரையில்
கண்ணீர் கலந்தது கடலின் மடியில்
தேசம் சிவந்தது உதிரம் உறைந்த்து
நாங்கள் அழுதோம் உறவுகளிழந்து
கேட்பாரும் இன்றி தேற்றுவரும் இன்றி
எம் தேசம் முழுவதும் உயிர்கள் மடிந்தது
எலும்புக்காய் தூங்கிய
இனத்துரோகிகளால் எம்
விடுதலை வேட்க்கை முற்று பெற்றது
முள்ளிவாய்க்கால் மண்ணிலே
மறந்து விடவுமில்லை
மன்னித்து விடவுமில்லை
நாங்கள் சுமந்த வலிகளை
எங்கள் குருதி ஆற்றின் ஆழத்தை
காணத்துடித்தது உலகங்கள் அன்று
விடுதலைக்காய் உயிர்விடும்
புனிதத்தை என்ன செய்திட முடியும்
கதிகலங்கிய தமிழினம்
கண்ணீர் ஆற்றில் மிதந்தது
காயங்கள் ஆறினாலும்
காயத்தின் வடுக்கள் இன்னும்
எம் உடலினில் தழும்புகளாக
அதே போலத்தான் எம்
விடுதலை வேட்க்கையும்
முள்ளிவாய்க்கால் மண்ணில்
முற்றுப்பெறாமல் மீண்டும் மீண்டும்
எம்மை உயிர்த்தெழ செய்கின்றது
சிவா TE