கார்த்திகையின் நிமிர்வு………
நிமிர்ந்த கார்த்திகையின்
நீள் முகத்தில்
வரைந்த தாயகம்
நாளை துளிர்க்கும்
அழுத உறவுகளின்
விழிநிர்த்துளிகளிலே
மாண்ட மாவீரம்
உயிர்பெற்றிருக்கும்
நிறைந்த பூக்கள்
மாவீரரின் மணம் பரப்பி
வீசும் காற்றில்
வியாபித்திருக்கும்
துயிலும் இல்லத்தில்
பூத்தபடி
மலர்ந்த கல்லறைகள்
புன் சிரிக்கும்
உறைந்த உயிரின்
உள் ஔியை
நுழைந்த மாவீரரின் மூச்சு
உயிர் கொடுக்கும்
இரந்து மீண்டும்
வரம் வேண்டியே
மாவீரரின் கல்லறை முன்
கைதொழும்
கார்த்திகைப் பூவினை
காணிக்கையாக்கியே
மனம் வருத்தமடைய
ஒன்றும் வழியில்லை
உறவுகளின் துயர்
துடைக்க
விரைந்து வெல்ல
வேண்டுமென்றே
வழிந்த விழிநீர்
துடைத்து
குனிந்த தலைகள்
நிமிர்வு கொள்ளும்
மாவீரர் நினைவுகளைச்
சுமந்தபடியே
களம் நொக்கிப்
பயணிக்கும்.
கவியாக்கம் : நாகதேவன் தமிழீழம்.
நாம் தமிழர் கட்சி.