மாவீரர்கள்…
கண்ணீரும் செந்நீரும் பாய்ந்தோடும்
மண்ணில்
நீங்கள் விடுகின்ற உயிர்மூச்சு
எங்கள் உயிர்வரை சென்று
பகையை சுட்டெரிக்க சொல்லுது
ஆயிரம் யானைபலம் கொண்டு
பகையை கொன்றொழிக்கச் சொல்லுது
இத்தனை பலம் உங்களுக்கு
யார் தந்தது
மாவீரரே!
மண்ணின் வைரங்களே
தமிழுக்கு ஔிதந்தீர்
தமிழர்க்கு வாழ்வளித்தீர்
வாழும் வரை உம்மை மறவோம்
மாவீரரே!
மனதில் நிறுத்தி நினைவில் கொண்டாடுவோம்
இன்று அந்நியன் கால்பட்டு
தேசம் சிதறுண்டு கிடக்குது
இனம் வலிகளைச் சுமந்து
வாழ்விழந்து தவிக்குது
உங்கள் துயிலிடம் வந்து
எங்கள் கவலைகளைச் சொல்லி
கதறியழ மனம் ஏங்குது
மாவீரரே!
வெற்றிக்கு மணிமகுடம் தரித்துவிட்டு
மண்ணடியில் வாழ்பவரே
ஞாலம் உள்ளவரை
உம் நாமம் நிலைக்கும்
மாவீரரே!
உங்கள் தியாங்கள் வரலாற்றில்
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்
நெருப்பின் துகள்களாய்
காற்றின் சுவாசமாய்
கடலின் அலைகளாய்
நிலத்தின் வாசமாய்
வானத்தின் மழைமேகங்களாய்
யுகங்கள் தோறும் வாழுவீர்
மாவீரரே!
எங்கள் வானம் வெளுக்கும்
சுதந்திரக்காற்று எம் வாசல் தழுவும்
வேப்பமரக்கிளையில் குயில்கள்
வசந்த இராகம் இசைக்கும்
வானை எம் கொடி உரசும்
மாவீரரே!
உங்கள் இலட்சியத்தீ வெல்லும் வரை
எங்கள் கால்கள் ஓயாது
விழிகள் உறங்காது.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ”