காற்று சுமக்கும் மாவீரர் லட்சியம்
காற்று சுமக்கும் மாவீரர் லட்சியம்வான்மேகம் தலைவணங்கி பாடுமந்தமாவீரர் புகழுரைத்து _ அதன்மழைத்துளியால் அஞ்சலித்துஅழுதுக்கொள்ளும் விடுதலை வலி நினைத்து.!
களச்சமர் கண்டு வந்த வேளத்து வேங்கைகள் வீரம் _ அந்தகாட்சியின் கோரத்தில் சினங்கொண்டது ஈழத்து தாகம்.!
எத்தனை வடு பட்டிருக்கும் மண்ணிற்குள் உறங்கும் உடல் _ நாளைகார்த்திகை மலர்களாய் மலர்ந்துவிடுதலை எழுதும் மடல்.!
உருவத்து உணர்வுகளில் உறையும்பாரினில் ஓர் தேசம் _ அவர்கள்ஒன்று சேர்ந்து வளர்த்திட்ட மரத்தில்குடிகொள்ளும் வாசத்தின் பாசம்.!
அவரர் காட்டிய வீரம் இன்றும் மறையாத விசித்திரம் _ இனிகார்த்திகை வந்தாலே நெஞ்சினில்உணர்த்திடும் மறவர்கள் சரித்திரம்.!
காட்டினில் நின்று பெற்றவர் புகழைஉலகினில் சொன்னவர் _ தலைவன்போர்க்கலை வலிமை பகைக்கு தினம்நெஞ்சினில் குண்டை புகுத்தினர்.!
சந்தன வாசம் கண்டிடும் தமிழரின்தேசத்து வாசம் _ நாளைஒவ்வொரு தெருவிலும் கல்லறை புலியின் குருதியின் வீரம் பாடும்.!
ஈழத்து சரித்திரம் எழுதிக் கொள்ளவேநினைவில் வரும் கல்லறை _ அவர்மண்ணினை வணங்கி எழுவோம்கோபுர தீபம் காட்டும் மாவீரர் வழியில் முனைக் காடான் குபேந்திரன்