எல்லை காத்த சாமிகள் …!
எல்லை காத்த சாமிகள்
எதிரியை எதிர்த்த வேங்கைகள்
கணை கொண்டு பகை வெல்ல
வெஞ்சமராடிய வீரர்கள்
நிலம் வெல்ல நிமிர்வு கொள்ள
தடை வென்ற காவியங்கள்
மண்ணின் சுமை போக்க
மக்களின் துயர் தீர்க்க
இளமை கனவையெல்லாம்
மனதோடு புதைத்தவர்கள்
உரிமை மீட்க உணர்வு சிலிர்க்க
உதிரம் சிந்தியே கனவை மீட்க
தாய் தந்தை பாசம் மறந்து
தலைவனின் தானையில்
தமிழ் தேச புலிகளாய்
விடுதலை தேடியே நடந்தார் வேங்கைகள்
அடிமை விலங்குடைக்க
அறத்தின் நெறி கொண்டு
அல்லும் பகலும்
தமிழ் மண் காக்க தம்முடல்
வதைத்தோர்
விழிகளில் உறக்கமின்றி
விடுதலைக்காய் விழித்திருந்தோர்
போர்க்களங்கள் அதிர
புலிப்படை நிமிர
எதிர் நின்று எதிரியை
வதம் செயதோர்
மார்பிலே குண்டேந்தி
விழிகளை மூடியே
குழிகளில் உறங்கும்
வீரர்கள் கனவுடன்
எம் பயணங்கள் தொடரும்
=சிவா TE=