கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல !

In தாயக கவிதைகள், மாவீரர் கவிதைகள்

 

கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல !

இன்னும்
எத்தனை காலம் தான்
கண்ணீர் விடப்
போகின்றீர்கள்
இழந்தவைகளை எண்ணி

இன்னும்
எவ்வளவு நேரம் தான்
கண்ணீர் சிந்தப்
போகின்றீர்கள்
உங்கள் தனியரின்
கல்லறையின் முன்னாள்

கல்லறைகள்
கண்ணீர் விடுவதற்கல்ல
கருத்தரிப்பதற்கே!

ஒரு
இருளின் யுகத்தை
எரிப்பதற்க்காகத் தான்
அவன்
சூரியனாக்கி போனான்

போராளி நடந்த
சுவடுகளை
தொட்டுப் பாருங்கள்
சுள்ளென்று சுடும்
அவன்
விடுதலையின் தாகங்கள் !
அவன்
உயிரின் ஆன்மா
எதை நினைத்து
உறங்கிப் போயிருக்கும்
தனது
தோளில் தாங்கும்
சுதந்திர வேட்கையை
தனது சந்ததி
சுமக்கும் என்றுதானே….

அவன் வீரமரணத்தின்
அர்த்தத்தை
அசிங்கப்படுத்தாதீர்!

கண்ணீர் விடுவது
கன்னத்தில் கை வைப்பது
கோழையின் செயல்!

விழிகளை துடையுங்கள்
தெளிவான பாதையை
தேடுங்கள்

மீண்டும் மீண்டும்
இழப்புகள்
எதிரொலிக்கலாம்

இழப்புக்கள் இன்றி
எதுவுமேயில்லை

இழந்தவைகளில்
இருந்து தான்
அவன் எழுந்தான்!

எரிந்த குடில்
கருகிய வயல்
எரியுண்ட படிப்பகம்
வாழ்விழந்த பெண்
ஓடிய குருதி
அயலவரின் பிணம்

இழப்புகலிருந்து தான்
அவன் எழுந்தான்!

கண்ணீர் சிந்தி
கல்லறையை
களங்கப்படுத்தாதீர்கள்

விழிகளைத் துடையுங்கள்
விரைவாய்
அவன் வழி தொடருங்கள்
கல்லறைகள்
கண்ணீர் விடுவதற்கல்ல !

– எஸ்.ஞானவேல்.
 சூரியப் புதல்வர்கள் 1996 இருந்து….

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.