இதயபூமி 01

In வெற்றி தாக்குதல்கள்

தமிழீழ தேசத்தின் இதயம் அது. மணலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் மூச்சாய் இருந்துவரும் மையம். இந்திய வல்லாதிக்கப் படைகளை முகத்தில் அறைந்து வீடு அனுப்புவைத்ததில் பெரும் பங்கெடுத்துக் கொண்ட களபூமி. எல்லாவற்றிற்கும் மேலாக வடதமிழ் ஈழத்தையும், தென்தமிழ் ஈழத்தையும் இணைத்து வைத்திருக்கும் பால பூமி. மணலாறு, தமிழீழத்தின் இதயத்தைப் பிளந்து தமிழ் மக்களின் தாயக தாகத்தை அழுத்து விடத் துடிக்கும் எதிரிக்கும் அந்தப் பிராந்தியம் முக்கியமாகத்தான் இருந்தது. மிகக் குறுகிய காலப் பகுதியில் சிங்கள பேரினவாத அரசு ‘வெலி ஓயா’ என புதிய நாமம் சூட்டி அப்பகுதியில் வாழ்ந்த தமிழ் சுதேசிகலையெல்லாம் விரட்டியடித்து, அங்கெல்லாம் சிங்கள மக்களைக் குடியமர்த்தி, அவர்களுக்கு பாதுகாப்பளிக்கவும் சில அபகரிப்புக்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் வீறாப்புடன் எழுந்து நிற்பதுதான் ‘மண்கிண்டிமலை’ அது எதிரியின் பாசையிலே ‘ஜானக புர’.

ஆனால்….. 25.07.1993 அன்று இரவு விடிந்தபோது, எதிரு அதிர்ந்தான். உலகம் வியந்தது. சிங்கள தேசம் ஒருமித்து ஒப்பாரி வைத்தது. ‘வெட்கத்துக்குரிய நாள். எது பிழையாகிப் போனது?’ இப்படிப் பலவாறு தமது இராணுவத் தோல்விகளை தாங்கிக்கொள்ள ம்,உடியாமல் அழுதன பல சிங்களதேச நாளேடுகள்.

ஆம், பேரின அரசினால் மிகப்பெரிய தமிழினப் படுகொலை நடாத்தி முடிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் நிறைவெய்திய வேளையில் ( 1993 கார்த்திகை வரையப்பட்ட கட்டுரை தேசக்காற்று இணையம் வராலாற்றுடன் இன்று பதிவு செய்கிறது) கடந்த 25.07.1993 அன்று இரவோடு இரவாக இப்பகுதியின் மிகப் பெரிய முகாம்…. எதிரி தனக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ததெனக் கருதி வந்த முகாம்…. அப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு இராணுவத் தாக்குதலுக்கும் கட்டளைத் தலைமையகமாகப் பயன்படுத்துப்பட்டு வந்த மண்கிண்டிமலை இராணுவ முகாம்….. அத்துடன் அதனைச் சூழ்ந்திருந்த சிறிய முகாம்களும் அரைமணி நேரத்தில் தகர்த்தழிக்கப்பட்ட வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதயபூமி 01 எனப் பெயர் சூட்டப்பட்டு விடுதலைப் புலிப் போராளிகளினாலும் அவர்களின் பின்னால் அணிவகுத்து நின்ற துணைப்படை வீரர்களினாலும் நடாத்தப்பட்ட இந்த மின்னல் வேக, வெற்றிகரமான தாக்குதலில் தமது இனிய உயிர்களை இதயபூமிக்குத் தந்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாய் உறங்கிக் கொண்டனர் பத்து வேங்கைகள்.

70க்கும் மேற்பட்ட இராணுவம் கொல்லப்பட்டு, 5 கோடி பெறுமதியான ஆயுதங்கள் அள்ளப்பட்டு வெற்றிகரமாக நிறைவேறிய இதயபூமி 01இன்னும் எத்தனை தடவைகள் இந்தப் பகுதியில் வேடிக்கப்போகின்றதோ என்று எதிரி ஏங்கிக் கொண்டிருக்கிறான்.

– எரிமலை (கார்த்திகை 1993) இதழிலிருந்து ஈழப்பறவைகள்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.