மாவீரர் நினைவோடு எழுவோம்
உணர்வோடு கலந்து
உரமாகி போனீர்
உமைத்தானே நெஞ்சு
உறவாக எண்ணும்
ஈழத்தின் விடியலுக்காய்
வித்தாகி போனீர்
தாயகம் மீட்கவே
மாண்டுனீர் போனீர்
தணியாது தணியாது
தாயக தாகம்
தளராது விடிவொன்றே
முடிவென்று எழுவோம்
காந்தள் மலராலே
உம்பாதம் தொழுதோம்
உம் நினைவோடும்
உம் உணர்வோடும்
எந் நாளும் போராடும்
வலிமை நெஞ்சோடும்
ஓயாது ஒதுங்காது
ஓரணியாய் ஒன்றிணைவோம்
இடியாது ஈழம்
இனியில்லை துயரம்
துணிவுண்டு துயரில்லையென்று
எழுவோம் எழுவோம்
வீழ்வில்லை எழுவோம்
வட்டக்கச்சி பவிதன்