எங்கள் மாவீரர்கள்!!!
போர் முழக்கங்கள் ஏதுமின்றி தலைவனின் கண்ணசைவில் வில்லெனப் பாய்ந்து
விண்ணையும் வென்று வரும்
வீரம் செறிந்த வீர வேங்கைகள்!!!!
சாமான்ய மனிதர்களாய்
நம் கண்முன்னே நடிமாடி
வீரமும் தியாகமுமாய் களம் கண்டு
நினைவுகளால் தடம் பதித்த
காவிய நாயகர்கள்!!
விதையாய் தங்கள் குருதியை ஈந்து
கார்த்திகை பூவிற்கு வண்ணம் தந்து
எங்கள் உள்ளங்களில் நிலைபெற்ற நிரந்தர தியாகிகள்!!
தலைவனின் ஒற்றை வார்த்தையில் அழிவேயின்றி மீண்டும் மீண்டும் அக்கினிக்குஞ்சாய் எழுந்து வரும் பீனிக்ஸ் பறவைகள் – எங்கள் மாவீரர்கள்!!
– உமா
ஒஸ்லோ, நோர்வே