தணியும் தாகம்.
விழியோரம் சொரிகின்ற
கண்ணீர்- உம்
வித்துடல் மூடிய
மண்ணினில் விழாதோ?
ஒரு பிரளையம்
முளையாகி எழாதோ!?
களத்தினில் சீறிய
இரத்த கறைகளில்
உறைந்ததா ஈழம்?
இல்லை
கந்தக தீயில்
கருகிய கண்களுள்
மறைந்ததா தாகம்?
என்னவொரு பகிடி,
இரண்டிழை விட்ட
பெடியொன்று சொல்லுது
வேண்டாமாம் ஈழம்
வெட்டி கதையது
விட்டொரு நிலமது
போதுமாம் வாழ
சிங்களன் ஆள!!!
கட்டேல போக!
காட்டேரி அடித்து சாக!
எம்மவர்
வீர தீர தியாகமென்ன
வெறும் விற்ப்பனைக்கான
பண்டமோ?
அவர் உடலெரிந்த
சாம்பல் என்ன உன்
கற்பனைக்கு சம்பலோ?
ஆண்ட பரம்பரை ஆள
அறுகதையில்லையோ?
தமிழ் ஈழத்திற்க்காய்
மூண்ட தீ என்ன
முள்ளிவாய்க்காலில்
அணைந்ததாய் எண்ணமோ?
திசையெட்டும்
தண்ணீர் கோர்த்து
மிதக்கிறது மேகம் – அது
திரண்டு பொழியுமொரு
காலம் தொலைவில்
இல்லை அந்த தூரம்
தணியும் தமிழர் தாகம்
தரணியில் மிளிரும்
தமிழர் தேசம்!!!!
~ஜெயச்சந்திரன்~