மாவீரர்கள் மரணிப்பதில்லை
விழிகள் சொரியும்
கண்ணீரின்
வலிகள் தெரியுமா
புலிகள் தூங்கும்
கல்லறையின்
புனிதம் தெரியுமா
உனக்கு புனிதம் தெரியுமா
உலகே உனக்கு
மனிதம் தெரியுமா..?
உயிரை வாழ வைப்பது
உயிர்மூச்சு அல்லவா-எம்
உரிமை காத்து நின்றது
உத்தமர் வீச்சு அல்லவா.?
கலகம் செய்த காடையரை
கலைத்தவர் அவரல்லவா
உலகத்தமிழர் உயர்வுபெற
உயிர் கொடுத்தவர் அவரல்லவா.?
கொடுமை கண்டு வெகுண்டெழுந்து கொதித்தவர் அவரல்லவா-தமிழன்
அடிமையாக வாழான் என்று திருப்பி அடித்தவர் அவரல்லவா.?
கழுத்தில் நஞ்சைக்கட்டியது-எமை
காத்து நிற்கவல்லவா
கடவுளான வீரர்களை-எம்
கனவிலும் மறப்பதுவா..?
உனக்கும் எனக்கும் தெரியும் தமிழா-அவர்கள்
உயர்ந்த பொருளல்லவா-தம்
உயிரைக்கொடுத்து-பிறர்
உயிரைக் காப்பது
ஒப்பற்ற செயலல்லவா..!
தமிழா ஒப்பிக்க வேண்டாமா……?
த.யாளன்