மாவீரம் தந்த மாவீரர்!!
தங்கத்தலைவராம் தம்பி அவர் வீரம் செறிந்த நம் மண்ணில் வித்தொன்றை இட்டு வைத்தார்! இட்டு வைத்த வித்ததுவும் - இன்று விருட்சமென வளர்ந்ததிங்கே!
சிந்திப்போன செங்குருதியது
நீறுபூத்த செந்தணலாய்,
உறையாது, வற்றாது, உரமென
உறங்கியே கிடக்குதிங்கே!
காவியத்தின் சாட்சியென
காற்றிலாடும் கார்த்திகைப்பூவும்
துயிலும் இல்லம் ஸ்பரிசித்தே
சொல்லுதிங்கே – நம்
காவிய நாயகர்கள் வாசம்!
வித்துடல்தான் தூங்குதிங்கே
விழிகள் இன்னும் துஞ்சவில்லை!
விழித்தெழுந்து வந்ததெனில்
விடியல் ஒரு தூரமில்லை!
ஏற்றமிகு கார்த்திகையில்
வீறு கொண்டு எழுந்திடுவோம்!
கூடி நின்று எழுச்சி கண்டு
மீட்டெடுப்போம் ஈழதேசம்!
தேசத்தின் நாயகர்களாம்
நம் மாவீரர் புகழ் பாடி
ஏற்றிடுவோம் தீபம் இங்கு
போற்றிடுவோம் அவர் தியாகம்!
செலுத்திடுவோம் வீரவணக்கம்!!
– உமா
ஓஸ்லோ, நோர்வே