விழிமூடிப் போன மகளுடன்
தந்தை பேசுகிறார்……………
விழிமூடி
வீரவிதையாகிப் போன
மகளுடன் தந்தை பேசுகிறார்
மழைக்கால மேகம்
மனதோடு உன் நினைவுகள்
கண்ணே உன்னைக் காண
வேண்டி தந்தை அழைக்கிறேன்
நீ மீண்டு(ம்) வருவாயா
கடைசியாய் நீ
விடுப்பில் வந்தபோது
நட்டு வைத்த மாவும் தென்னையும்
காய்திருக்கு
உன் வரவுக்காய் காத்திருக்கு
மகளே
நிலவெறியும் முற்றத்தில்
நாம் ஒன்றாய்
உணவுண்ட நாட்கள்
எந்தன் நினைவோடு
நிழலாடுது மகளே
நீ படித்த பள்ளிக்கூடம்
நீ ஓடியாடிய தெருக்கள்
எல்லாம்
நீயின்றி தனிமையிலே
வாடுது மகளே
எங்கள் ஊரை
பகை வந்து திண்ற போது
மண் மீட்க
தலைவன் அணியில்
சேர்ந்தாயே மகளே
உன்னை மகளாகப் பெற்ற
பெருமையில்
கர்வம் கொண்டேன்
மகளே
எங்கள் வீட்டுத்தோட்டதில்
பூத்திருந்த
கார்த்திகைப் பூவோடு
இன்று உந்தன்
கோயில் வந்தேன்
மகளே.
படைப்பு : நாகதேவன் தமழீழம்