ஏன் மறந்தோம் இவர்களை…!
திரும்பி பார்க்கப்படவேண்டிய
ஒரு மாதம்
திரும்பிபார்க்காத இந்த மாதம்
நினைத்து பார்க்க வேண்டிய
உயிர்களை
நினைவில் இருந்து
வீசிய மனிதர்களே
சிந்தியுங்கள்
விதையாய் வீழ்கின்றோம்
விருச்சமாய் எழுவோம் என
வீழ்ந்த எம் உறவுகளை
ஈழத்தாயின் மானம்
காக்க இன்னுயிரை
இழந்தவர்களை
இரண்டு லட்சம் உயிர்கள்
குடிக்கப்பட்டது நினைவில் இல்லை
அவர்களை காத்திட
வேங்கைகள் தன்னுயிர்
கொடுத்ததும் நினைவில்
இல்லை
காணமல் போனோர்
கடத்தப்பட்டோர்
எவரும் இன்று கணக்கில்
இல்லை
எங்கே செல்கின்றீர்கள் நீங்கள்
ஏன் மறந்தீர்கள் இவர்களை ?
கயவரின் கூட்டத்தில்
கைபொம்மையாகி
காட்டிக்கொடுத்திட /கூட்டிக்கொடுத்திட
வேண்டாம் என் ஈழத்தாயை
ஈழக்கனவோடு
எம் உயிர்காக்க
வீர வேங்கைகளாய்
இறையடி சேர்ந்த
உறவுகளுக்கு
ஏற்றி வையுங்கள்
ஓர் தீபம்
இனியாவது எம்
வாழ்வு ஒளி பெறட்டும் ….!!!!
ஈழம் புகழ் மாறன்