இது கார்த்திகை மாதம்…..
எல்லாளன் பெயர்விளங்கத் – தமிழ்
ஈழத்தை ஆட்சி செய்தாய்
வல்லோனே! பகைவெல்ல – உன்
வரவெண்ணிக் கிடக்கின்றோம்.
வழிமேல் விழிவைத்துத் – தலைவா ! உன்
வரவை எதிர்பார்த்துக்
கழியும் நாள்எண்ணி – நாங்கள்
காத்துக் கிடக்கின்றோம்.
மாவீரர் நாளில்நீ உரைநிகழ்த்த
வருவாய் எனஎண்ணிக்
காவலனே ! ஆவலுடன் – நாங்கள்
காத்துக் கிடக்கின்றோம்.
ஈழத்தின் உறவுகள்தாம் – சிங்களர்
இழிசெயலால் சீரழிந்து
வாழும் துடிப்புடனே – உன்றன்
வருகைக்கே ஏங்குகிறார்.
கொன்றுவிட்டோம் எனச்சொல்லி நாளும்
கொக்கரிக்கும் இராசபக்சே
நின்றழுது புலம்பிடவே – உன்வரவை
நினைத்துக் கிடக்கின்றோம்.
நடித்திடலாம் தலைவர்சிலர் – ஆனால்
நல்லதமிழ் மக்களெலாம்
துடிக்கும்நல் உணர்வுடனே – என்று
தூயோராய் வாழ்கின்றார்.
தலைவர்சிலர் தமிழ்நாட்டில் – இனத்தைத்
தாங்குவதாய் நடிக்கின்ற
நிலையெண்ணி நின்றிடாமல் – தலைவா ! நீ
நேரில்வர வேண்டும் !
-பேராசிரியர் அறிவரசன்-