காவிய நாயகர்கள்
செந்தணல் மீதிலும் வெஞ்சமராடி
அலைகடல் மீதே தாவி விளையாடி
விண்ணும் வியந்திட சிறகுவிரித்து
மண்ணும் மலர்ந்திட மார்தட்டியே
உலகை வியந்திட வைத்திட்ட
தமிழ் வீரத்தின் விளைநிலங்கள்
அண்ணன் அணியிலே இணைந்திட்ட
தன்மானத்தின் பெரு நெருப்புகள்
தமிழ் ஈழத்தின் இன விடியல்கள்
மண்காத்திட்ட வீர மறவர்கள்
சரித்திரம் படைத்த மாவீரங்கள்
ஈழக்காவியத்தின் காவியநாயகர்கள்
வரிகள்
ஈழம் வாகீசன்.