ஆனந்தபுரம்
அன்று அனலாய் பற்றியெரிந்த அந்த தேசத்தில்…
எம்வீரர்கள் பலரின் தேகங்கள் சரிந்தது…..
உலகெங்கும் தேடினாலும் கிடைக்காத
போர்நடத்து வல்லுனர்கள்…..
புரட்சிப் பெண்களை
அகிலத்தில் எங்கேனும் தேடலாம்
ஆண்களுக்கு சரிநிகர் சமனாய் தியாகவுணர்வுடன் போர்கலைமிக்க பெண்ணியத் தளபதிகளை ஈழப்பரப்பில் மட்டுமே கண்டது உலகம்….
உண்மை ஒருபோதும் உறங்காது
உள்ளது ஒரு நொடிதானும் ஒழியாது…..
உலகப்பந்தின் வல்லரசுகள் ஒன்றாகி
கொடூர வேள்வி செய்த நாட்கள் வருடந்தோறும்
ஒரு கணமேனும் மீளாது கடந்துபோகாது…..
மக்களை கண்ணிமையெனக் காத்த
வீரத்தளபதிகள் வித்தான இக்காலப் பகுதி
கண்ணில் நீர் கசிய மீண்டுபோகிறது……
“கொரோனா”நோய்ப் பரவல்
இக்கால ஓட்டத்தில் வாட்டினாலும்
அன்று
ஈழமண்காக்க,தமிழினம் வாழ தம்முயிர் தனைத்துறந்த
சேனைத்தளபதிகள்,போர்வீரர்கள் ,
போருதவிப்படையினர்,
அரச பயங்கரவாத இனஅழிப்பில்
காவுகொள்ளப்பட்ட தமிழீழ மக்கள் யாவரையும்
எம் நெஞ்சிருத்தி சிரம்தாழ்த்திக் கொள்வோமாக……
து.திலக்(கிரி),
03.04.2020,
00:19.