கரைந்து போன உங்களுக்கு .!
நீயாரென்று தெரியாமல் உனக்கு என்றில்லாமல்
உங்களுக்கு வீரவணக்கம்
நீங்கள் தந்த உயிரை கண்ணுள் சுமந்த போது
இதயத்தில் பூமியின் அகலமாய்
விடுதலை உணர்ச்சி வந்தெம்மை தாக்குதையா.
நீவிட்ட இடத்தில் நானும் தொடர
கால்கள்துடித்ததையா
சிங்களத்தின் செருக்கடக்க கெடுநரிக் கூட்டத்தினுள்
கரும்புலியாய்’ கொடியவன் படை அழிக்க
புலிக்கொடி கொண்டு சென்றவர்களே!
நீங்கள் நடந்த தடம் பார்த்து
தமிழீழம் மெளனமாய் நிற்குதையா
கடல் மீன்களும் கரும்புலி வீரம் கண்டு
நீர் மேல் எழுந்து தலைவணங்கிச் சென்ற்தையா-
பிறப்பும் இறப்பும் அவன் செயல் என்ற
முறைமை கடந்தவர்களே.
சாவுக்கு சவுக்கடி கொடுத்து சாகாவரம் பெற்று
பகை முடித்து தமிழுக்கோர்தலை நிமிர்வு கொடுத்த
தவப்புதல்வர்களே வையகம் வணங்கிச் சென்றதையா
உங்கள் வீரம் கண்டு
-கவியாக்கம் :திருநகர் எஸ் .ஆர் .செல்வி
லெபனான்
வெளியீடு :எரிமலை இதழ்