கல்லறைகள் பேசுமெனில்….!
கார்த்திகை நாளில் மட்டும்
கல்லறை வந்து நின்று
மண்ணறை கட்டி அழும்
மாந்தர்க்கு எம் வணக்கம்.
சில்லறை விலைகள் பேசி
கல்லறை தன்னை விற்கும்
அரசியல் கட்சி எனும்
அரக்கருக்கும் எம் வணக்கம்
எம்மவர் காலம் ஒன்று
இருந்தது எங்கள் மண்ணில்
பொய்மைகள் இல்லை அது
புனிதத்தை போற்றுவதில்.
உங்களின் கையில் தந்த
ஒளி மிகு ஈழம் எங்கே
வல்லமை வகுத்து நின்ற
வரிப்புலி வீரம் எங்கே
தன்னையே தந்து செல்லும்
கந்தகப் பூக்கள் எங்கே
தானைகள் நடத்தி சென்ற
தகமை எம் தலைவன் எங்கே
எல்லைகள் தன்னை விட்டுத்
தொல்லைகள் சூழ்ந்த பின்னர்
கார்த்திகை மட்டும் எங்கள்
கல்லறை நனைப்பதேனா ……
…..கவிப்புயல் சரண்….
கார்த்திகை நாளில் மட்டும்
கல்லறை வந்து நின்று
மண்ணறை கட்டி அழும்
மாந்தர்க்கு எம் வணக்கம்.
சில்லறை விலைகள் பேசி
கல்லறை தன்னை விற்கும்
அரசியல் கட்சி எனும்
அரக்கருக்கும் எம் வணக்கம்
எம்மவர் காலம் ஒன்று
இருந்தது எங்கள் மண்ணில்
பொய்மைகள் இல்லை அது
புனிதத்தை போற்றுவதில்.
உங்களின் கையில் தந்த
ஒளி மிகு ஈழம் எங்கே
வல்லமை வகுத்து நின்ற
வரிப்புலி வீரம் எங்கே
தன்னையே தந்து செல்லும்
கந்தகப் பூக்கள் எங்கே
தானைகள் நடத்தி சென்ற
தகமை எம் தலைவன் எங்கே
எல்லைகள் தன்னை விட்டுத்
தொல்லைகள் சூழ்ந்த பின்னர்
கார்த்திகை மட்டும் எங்கள்
கல்லறை நனைப்பதேனா ……
…..கவிப்புயல் சரண்….