நினைக்கையிலே பெருமைதான்…..!
சீருடை தரித்த சீரணி ஒன்றின் முதல்வன்….
பேருடை தரித்த நாலுபடை கண்ட தலைவன்….
பாரிடை நின்று இனத்தின் பக்குவம் உணர்த்திய பன்முக கலைஞன்….
குன்றாத வீரமும்,மங்காத புகழும்
இவர் காலடியில் மண்டியிட்டது கண்டோம்….
என்றும் தாழடி பணிந்து….
உந்தன் சேவடி தொழுது….
ஓரணி நின்று….
ஈழமதை வென்று….
உங்கள் புகழது பாடிநிற்போம்….
புதுப் பரணியொன்றின் தமிழர்பாதை இதுவென்று….
கதிரவன் காலையில் உதிப்பதும்,
மாலையில் மறைவதும்
இயற்கையின் நியதியென்றால்…
தோன்றுதலும்,மறைதலும்
காலச்சக்கரம் ஒன்றில் நியதியாவதில் தவறேதுமுண்டோ…..??
காத்திருக்கிறோம்
மாசற்ற வீரர்கள் கனவு கண்ணெதிரே நிஜமாகுமென்று….
து.திலக்(கிரி)
06.02.2020,
01:42.