மண்ணுக்காய் நஞ்சுண்டோர் நாடு ….!
வல்ல தலை வழி நடத்தி சென்று போரில்
மெல்ல நிலம் மீட்ட கதை சொல்ல கேளீர்
பேரினத்து முகவரியாம் பிரபாகரன் -அவன்
ஓரினத்தை காத்து நின்ற கருணாகரன்
வீரியத்தை விதைப்பதிலே வள்ளல்
-அவன்
விண் நோக்கி உயர்ந்து நின்ற செம்மல்
ஆரியத்தை எதிர்த்து நின்று மண்ணில்
காரியத்தை முடித்து வைத்த முன்றல்
குலம் காக்க நஞ்சுண்டோர் உண்டு
-இது
நிலம் மீள நஞ்சுண்டோர் நாடு
பலம் இழந்து போகாத வாழ்வில்
பகை அழித்து வென்று வந்த காடு
சுற்றி வரும் உலகு நின்று எதிர்த்தும்
-எற்றி
அதை உதைத்து வென்ற பூமி
பற்றிப் பிடிக்கின்ற பகையை பந்தாடி
கலைக்கின்ற சாமி.
குனிந்த தலை நிமிர்ந்து கொள்ளும் விரைவில் -இங்கே
பணிந்த நிலை அகன்று விடும் அழகே
விரிந்த மார்பும் கை காலும் சோரா
நலிந்த நிலை அகற்ற வாடா வீரா
…கவிப்புயல் சரண்….