ஈழம் என்பது உதிர்ந்துப்போக தலை மயிறல்ல
அது மாவீரர்களின் ஆத்மா உலாவும் ஆலயம்.
உண்மை தமிழனின் உயிர் மூச்சி.
பட்டங்கள் பதவிகள் எம்மை தேடி வந்தாலும்.
சலுகைகளை எம்மை நாடிவந்து தந்தாலும்.
மாறாத தாகம் ஈழமென்ற ஒன்று .
இன்று பலர் நாவில் நர்த்தனமாடுகிறது ஈழம்
சிலருக்கு பணம் கொடுக்கும் இயந்திரம்
மற்றும் சிலருக்கு பதவி பெறும் இயந்திரம்.
பத்து வருடங்கள் கடந்தும் மக்கள் வீதியில்
பிணமாக கிடக்க அதைக்காட்டி பிச்சை
எடுக்க பலருண்டு.பிரச்சினை தீர்க்க எவருன்டு..?
வந்தவன் போனவனெல்லாம் வித்தைக்காட்ட
வீணாய் போகுதிந்த ஈழம் தட்டிக்கேட்க்க
பக்கத்திலும் நாம் இல்லை தண்டித்து போர்க்க
நம்மில் ஒற்றுமையும் இல்லை தனியாய் குரல்
கொடுப்போமென்றால் இந்த தரணிக்கு
செவிகளும் இல்லை.கட்டப்பட்ட கைகளோடு
இன்னும் எத்தனை காலம் காத்துக்கிடப்பது?
ஈழமது கல்லறையாகும்வறைய?
எழுத பல உண்டு எண்ணத்தில் கிறுக்கி
பயனில்லை பைத்தியமெண்டு
சிரித்து செல்லும் உலகமிது …..
— நாதியற்ற தமிழனில் நானும் ஒருவன் தீபன் —