தமிழர் பெருமை கூறும் கார்த்திகை திங்கள்….!
ஈழம் அமைதியாக இல்லை அது
போராட்ட உணர்வுகளை தயாரிக்கிறது !
தமிழீழம் மௌனமாக இல்லை
விடுதலைக் கருவை தயாரிக்கிறது !
தமிழர்கள் கொல்ல படலாம்
கொள்கை சாவதில்லை !
ஓனாய்களை கண்டு புலிகள்
மண்டியிடுவதில்லை !
சாவதை கண்டு புலி வீரன்
உறக்கத்திலும் அஞ்சுவதில்லை !
களத்தில் விதையாகும் போதும்
மாவீரம் பின்வாங்குவதில்லை!
நூறு நாட்டு படைகள் அடக்க முனைந்தாலும்
புலித் தலைவன் மோதாமல் இருந்ததில்லை!
எங்கள் மண்ணில் விளையும் பனைகள்
கூட நிமிர்ந்தே நிற்கும் !
கார்த்திகை பூக்கள் கூட பூக்கும் போது
வானம் பார்த்தே கிடக்கும் !
எங்கள் மண் வானம் பார்த்தே
மானத்தோடு என்றும் இருக்கும் !
மண்டியிடாமல் காயங்கள் தாங்கி
வீரத்தோடு தாய் மண் சிரிக்கும் !
ஈழம் புகழ் மாறன்