தமிழின் மானம் காத்த வீரவேங்கைகள்….!
தமிழின் மானம் காத்து
தமிழின் கௌரவம் காத்து
தமிழின் வீரம் பறைசாற்றி
தமிழர்களின் தாயக பூமியாம்
தமிழீழத்தை காத்து நின்ற
வீரவேங்கைகள்
துச்சமென தன்னுயிர் மதித்து
தமிழ்தாயகம் காக்கும்
வீர மறவர்கள் வாழும் பூமி
எங்கள் தமிழீழம் …! – தாய்
மண்ணுக்கோர் துயரென்றால்
எரிமலையாய் வெடிக்கும்
வீரவேங்கைகள் அவதரித்த மண்
மாவீரர்களின் தியாகம்
வார்த்தைகளால் வரைந்தாலும்
அடங்காது சித்தம்….!
தேச மானம் காக்க
எதிரியை எதிர்கொண்டு
இன்னுயிர் ஈந்த
மாவீரர்களே …..!!
விழி மட்டுமா கசிகிறது …?
இதயமும் கசிகிறதே…..!
உமக்கான வாரம் தொடங்கையில்
உமது கல்லறைகள் நோக்கி வருகையில்……..!!!!