கார்த்திகை பூக்கள் பூக்கும் தருணம்
இது காந்தள் பூக்கள் வாசம்
வீசும் மாதம்…
எங்கள் மானமா வீரரின் ஈகம்
பேசும் காலம்…
கருவோடு உம்மைத் தாங்கி
தாய் நடந்தால்…
தாய் மண்ணோடு எம்மைத் தாங்கி
நீர் நடந்தீர்…
உயிரோடு நீர் வாழ்ந்திட்ட
காலங்கள் மகிழ்ந்திருந்தோம்…
நீர் எம்மை பிரிந்ததும் வலு
இழந்தோம்…
என்று விடியும் தமிழ் ஈழம்
என்று கனவோடு துயில்கின்ற
மறவர்களே…
நாளை விடியும் நம் தேசம் நம்பி
உறங்களே…
வீர வணக்கம் உயிர் விதைகளே…
T.A.மதன்