தேச விடுதலைக்காய் உயிர் மடிந்த வேங்கைகள்
வீர தியாகத்தில்
விழி மூடிய வேங்கைகள்
பகை வெல்லவே
திடம் கொண்ட வீரர்கள்
உலகம் அறிந்திடா
உன்னத வீரத்தின் உச்சங்கள்
விடுதலை தேர் புதையுண்ட
போதெல்லாம் உயிர் விட்டு
வடம் பிடித்தோர்
தேச விடுதலைக்காய்
உயிர் விட்டு உரம் சேர்த்த வேங்கைகள்
மண்ணின் சுமை போக்க
மக்களின் துயர் தீர்க்க
மரணத்தையே யாசித்து மாந்தர்கள்
விடுதலை போரோடு
மண்ணில் வீழ்ந்த வித்துக்கள்
தேச கனவோடு பகையோடு
சமரிட்டு மடிந்து
வாழும் தெய்வங்கள்
நெஞ்சை துளைத்த
துப்பாக்கி ரவைகளின் சத்தம்
சோராமல் களமாடி
கனவு தேசத்தை
விழியருகே கண்டுவந்தோர்
வெற்றுடலாய் மண்ணில்
வீழ்ந்தனரே விதையாய்
தீர்ந்து விடாத தாகம் சுமந்து
திடமாக விடுதலை வடம் பற்றி
தேசத்தை காக்க தங்களை
வதைத்தே செங்குருதியால்
மண்ணை நனைத்தோர்
தீ தின்று வெடியான
தீரர்கள் கனவுகள்
எம் மண்ணில் இன்றும் மண் மேடுகளாய்
எத்தனையோ தியாகங்கள்
சுமந்த கனவு அத்தனையும்
தெய்வீக தேசத்தின் கனவு
அலைகள் போலெழுந்து
வந்த பகையை மலைகள்
நாமென்று உயிர் விலை
கொடுத்தோர் கனவுகள்
மீளெழும் காலமிது
கார்த்திகை இருபத்தியேழு,
=சிவா TE=