தமிழினத்தின் தலைவன் – தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே!

In தமிழீழத் தேசியத்தலைவர்

தமிழினத்தின் தலைவன் – தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே!

(நேற்று – இன்று – நாளை – என்றும்)

மேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து, பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன் !!!

இன்று அந்த தலைவனின் பெயரை சொன்னாலே பல தமிழர்களின் புது இரத்தம் பாயும் படி இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தமிழர்களின் தலைவனாக உள்ள அந்த தலைவனை, நேரில் பார்த்தவர்கள் மிக மிக சொற்பமானவர்களே.

இனத்துக்கு ஒரு இழுக்கென்றால் இனம் காக்க தன் உயிரையும் துச்சமென தூக்கி எறிய துணியும் தமிழன் என்ற வீரமிக்க இனமொன்று இந்த உலகில் உள்ளது, அந்த இனம் ஒருபோதும் பகைவன் காலில் வீழ்ந்து மண்டியிட்டு வாழாது என்ற வரலாற்றை உலகிற்கு உணர்த்திய அந்த தலைவனை தமிழ் இனத்தின் வீரத்தின் அடையாளமாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.

மேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து, பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன்.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழ்த்தப்படும் மக்களுக்கான உரை, ஆனால் அந்த 35 நிமிட உரையில் அடுத்த ஒரு வருடத்தில் அந்த மண்ணில் நிகழப்போகும் அரசியல், பொருளாதார, இராணுவ மாற்றங்கள் போன்றவற்றை மிக துல்லியமாக எடைபோட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமே அந்த தலைவனின் தனி சிறப்பு .

தன்னைப்பற்றி எப்போதும் ஊடகங்கள் பேசவேண்டும் என்றோ, மக்கள் தனது புகழை போற்ற வேண்டுமென்றோ அந்த தலைவன் ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் அந்த தலைவனை பேட்டி காண விரும்பிய போது அந்த தலைவன் கூறிய பதில் அற்புதமானது. ” நான் பேச்சுக்கு வழங்குவது குறைந்த அளவு முக்கியமே, நாம் செயலால் வளர்ந்த பின்னே நாம் பேச ஆரம்பிக்க வேண்டும்.

வாய்ப்புகள் பல இருந்தும், அந்த தலைவன் தனது நாட்களை பல அடுக்கு வீடுகளிலோ, AC அறைகளிலோ கழித்ததில்லை,. இருள் சூழ்ந்த அடர்ந்த காடுகளில் கடினமான வாழ்க்கையினையே அந்த தலைவன் இறுதி வரைக்கும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார் .

முதலமைச்சர் பதவி வேண்டும் என்று கற்பனை கோட்டைகளை கட்டி வாயில் எச்சில் ஊற கனவுலகில் மிதந்து கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களுக்கு மத்தியில் தேடி வந்த முதலமைச்சர் பதவியையும், கோடிக்கணக்கான பணங்களையும் துச்சமென தூக்கி எறிந்து தமிழர்களின் விடிவுக்காகவே தனது வாழ்நாளை கழிக்கின்றவர் அந்த தலைவர்.

வலிமை மிக்க ஒரு முப்படைகளை கொண்ட மரபு ரீதியான இரானுவத்தினையே தன் பின்னால் வைத்திருந்து, உலக வல்லரசுகள் பலவற்றிற்கு சிம்மசொப்பனமாகவும், சுதந்திரம் வேண்டி போராடும் போராட்ட இனங்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்கும் அந்த தலைவன் வேறு யாருமல்ல தமிழன் என்ற தனிப்பெரும் இனத்தின் வீரத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரில் உலகமெங்கும் முழங்கச் செய்த தேசிய தலைவர் மேதகு வே. பிராபகரன் அவர்கள் தான் அந்த தலைவர்.

இன வீரம்,இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளமாக இன்று வரைக்கும் வாழும் நம் தலைவர் பிரபாகரன் அவர்களை நம் தலைவராக பெற்றதே இந்த ஜென்மத்தில் நாம் பெற்ற அதி உச்ச சிறப்பாகும்.

தமிழீழம் எங்கள் உயிர்! அவ்வுயிரே எங்கள்தேசிய தலைவர்! தமிழரின் தாகம்! தமிழீழ தாயகம்!

தேசம் விடிவு பெறவேண்டும் அதை எம் தலைவன் ஆண்டிட வேண்டும்……

தலைவன் என்றால் அது தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மட்டுமே….

தலைவன் என்றால்….

மக்கள் விட்டு

எட்ட நின்று..

குளிரூட்டி வாகனத்தில்

தான் மகிழ்ந்திருந்து..

வெயில் காய்ந்த

புழுதி குளித்த

வியர்வை வழிந்தோடும்

மக்கள் முன்..

கசங்காத வெள்ளை வேட்டி

மேடை

தரிசனம் தந்து..

வலு விழந்த

வாழ்விழந்த சொந்தங்கள் முன்..

நாலு வார்த்தை

நயவஞ்சகமாய் உதிர்த்து…

எதிரி தாழ் பணிந்து

சூழ்ச்சி மகுடம் சூடி…

கேட்ட கேள்வி

நேரிடைப் பதில் இன்றி

மேவிப் பேசி..

வாய்கிழிய

தத்துவம் பேசி…

புத்திசீவித்தனம் என்று

தலைக்கன

ரவுடீசம் செய்து

நடப்பவனல்ல..!

தானைக்கும்

தலைவன்…

தமிழர் தரணிக்கும் பரணிக்கும்

சொந்தக்காரன்

தமிழர் தளபதி…

தகுதி விகுதி

என்றின்றி…

தமிழ் தாயை

தரையில் வந்து

அவள் நிகராய் நின்று

கையெடுத்து வணங்கி..

அவள் புரியும்

மொழி கொண்டு

உறவாடும் இவனே

உண்மைத் தலைவன்..!

தமிழ் தாய்

மைந்தன்..!

ஈழப்பறவைகள் இணையத்துக்காக புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.