எங்கள் தேசத்தின்
கார்த்திகைத் தெய்வங்கள்……..
இனத்தின் விடுதலையை
இதயத்தில் சுமந்து
கரங்களில் ஆயதமேந்தி
துப்பாக்கியால் தமிழனின்
வரலாற்றினை எழுதிச்சென்றவர்கள்
இன்று உம் நினைவுகளை
கவிகளாய் வடிக்கிறேன்…
காலப்பெரு வெளியில்
நீளும் உம் தியாகமும் வீரமும்
என்றும் எம்நெஞ்சே ாடு வாழும்
மாவீரரே!!
நீங்கள் இறந்துவிட்டதாக
யார் சொன்னது
கடவுளுக்கு மரணமேது
பிறப்பையும் இறப்பையும் நிர்ணயிப்பவன் அவனென்றால்
எங்கள் வாழ்வை நிர்ணயிக்கும்
நீங்கள் எவ்வாறு இறந்துபோவீர்கள்…
நீங்கள் எங்கள் தெய்வங்கள்
இது சத்தியம்…
மாவீரர்கள் காலத்தால் அழிவதில்லை
எங்கள் தலைமுறைக்கென
காலத்தை உருவகிப்பவர்கள்
காலன் எம் உயிர்களை
பறிக்க வந்தபோதெல்லாம்
காப்பரணாய் முன்நின்று
தடுத்தாட்கொண்ட அய்யனார்கள்…
தேசமெங்கும் வீசுகின்ற காற்றில்
உங்கள் மூச்சிருக்கும்
நீங்கள் சிந்திய குருதி
தாய்மண்ணில் கலந்திருக்கும்
ஊர்கோலம் போகும் மேகக்கூட்டங்கள்
மாவீரர் கல்லறையை நீராட்டும்
கடலும் உங்கள் நினைவலைகளுடன்
கரைதழுவும்
மாவீரரே!!
கார்த்திகைத் தெய்வங்களே
வரம் வேண்டி உங்கள் வாசல் வந்துள்ளோம்
கார்த்திகை இருப்பத்தேழில்
கண்திறப்பீர்
எங்கள் தேசம் காக்கும்
கார்த்திகைத் தெய்வங்களே!!.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.