வீர மொழி பேசும் உங்கள் தியாக முகம் ….!
வீர மொழி பேசும் உங்கள்
தியாக முகம் தெரிகிறது
ஈகைச்சுடர் ஏற்றும் போது
உம் ஈகம் எமக்கு புரிகிறது………!!
ஓளிரும் சுடர் ஏந்தி உங்களிடம் வாறோம்
ஒரு தரம் எமக்காய் விழிதிறந்து பேசும்
கார்த்திகை பூ எடுத்து கல்லறை வாறோம்
களத்திலே நடந்ததை எம்மிடம் கூறும்
விழிகளில் நீருடன் உமைக் காண வாரோம்
வீரியம் எமக்கு விரைந்து நீர் தாரும்………………!!
காவியநாயகர் நீங்களே
கரிகாலன் வளர்தெடுத்த
அக்கினிக் குழந்தையும் நீங்களே
தமிழ் மானம் காத்தவரும் நீரே
தமிழீழ விடியலுகாய்
உழைத்தவரும் நீரே…………………!!
கார்த்திகை மாதம் உமதே
கார்த்திகை பூவும் உமதே
பகை கதை முடித்தீரே எமக்காய்
எம் பயணங்கள் தொடர்ந்திடும்
உமக்காய்………………………!!
மீள் பதிவு (06.11.2014)
காவியநாயகர்கள் நினைவுடன்
எஸ்.றதன் கார்த்திகா.
( ஈழப்புலி மகள்.)