தாயகக் கனவுகள் சுமந்தவர்களின் தாகம்…………
இது கார்த்திகை மாதம்
கண்ட கனவுகள் பலிக்கும் மாதம்
ஊர் கூடி உறவுகள் கூடி
காவல்தெய்வங்களை போற்றும் மாதம்
வீதியெங்கும் தோரணம் கட்டி
சிவப்பு மஞ்சள் கொடிகளினால்
அலங்கரித்து
தமிழீழமே எழுச்சிக்கோலம் பூண்டிருக்கும் மாதம்
மாவீரர்கள்
எங்கள் உணர்வுக்கு குரல் கொடுத்து
உரிமைக்கு தோள் கொடுத்த
அக்கினிக் குழம்புகள்
நீண்ட நெடிய விடுதலைப் போரின்
இரத்தச் சாட்சிகள்
சாவினை வென்று
சந்தணப்பேழையில் துயிலும்
சத்தியத்தீயின் சமர்பணங்கள்
நீங்கள் வாழ்ந்த மண்ணை
மேனியில் பூசும் போது
மெய்சிலிர்த்துப் போகிறது
ஆழக்கடல் வற்றி விட்டதாக
எவரும் கணக்கெழுதிவிடாதீர்கள்
நாளை ஓயாத அலையாகி
எழுந்து ஓங்கி அடிக்கும் போது
நீங்கள் தான் நொந்து போவீர்கள்
நாங்கள் மெளனமாக இருக்கிறோம்
ஊமையாகிவிடவில்லை
கால்களில் அதே வேகமும்
நெஞ்சத்தில் தலைவன் தந்த
அசைக்க முடியாத மனவுறுதியும்
சற்றும் குறையாமல் இருக்கிறது
மாவீரரே
உங்கள் நினைவாய் உள்ளோம்
ஆற்றமுடயா பெருந்துயரில் உள்ளோம்
உங்கள் கனவுகளை
வென்று தரமுடியாதவர்களாய்
கல்லறை முன் கைகட்டி நிற்க்கிறோம்.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.