கார்த்திகைப் பூக்கள்…!
மாவீரர்களே நீங்கள்
காலம் ஆனவர்கள் அல்ல
காவியம் ஆனவர்கள்
தமிழின விடியலுக்காய்
விதையாகிப் போனவர்கள்
எங்கள் காவல் தெய்வங்கள் நீங்கள்
கார்ததிகையில் பூத்த மலர்கள்
சூரியப் புதல்வர்கள் நீங்கள்
எங்கள் கண்ணின் மணிகள்
எமது இன விடியலின் விடி வெள்ளிகள்
எமது இதயத்தில் வாழும் காவிய நாயகர்கள்
மாதவம் செய்து பெற்ற முத்துக்கள்
மண்ணில் விளைந்த மாணிக்கங்கள்
வீர மறவர்கள் எங்கள் மாவீரர்கள்
விண்ணும் மண்ணும் காணாத
விந்தை மிகு சரித்திரங்கள்
விழியாகி எங்கள் ஒளியாகி வாழும்
கல்லறை தெய்வங்கள் எங்கள் மறவர்கள்
நெஞ்சிலே ஊறும் உணர்வுகளால்
உங்கள் கல்லறையில் ஏற்றிடுவோம்
ஒளி தீபங்கள்
போற்றிடுவோம் வணங்கிடுவோம்
உங்கள் பாதங்களை உயிரிலே
கலந்திட்ட மான மாவீரர்களை
காலம் உள்ள வரை
புனிதா-கனடா