மாவீரர்கள் எங்கள் கடவுள்கள்
கார்த்திகைப் பூக்களிளே
காற்று நுழைகின்றதே
காவிய நாயகர்மேல்
கண்ணீர் சொரிகின்றதே
ஏற்றிய தீபத்திலே
எம்முயிர் எரிகின்றதே
நேற்றைய நினைவுகளோ
நெஞ்சோடு கனக்கின்றதே
உயிர் கொடுத்த தெய்வங்களோ
ஓவென்று அழுகின்றதே
ஊற்றுக்கள் போலிங்கு
உணர்வுகள் கொதிக்கின்றதே
காட்டிலும் மழையினிலும்
வாட்டிய வெய்யிலினிலும்
கடமை செய்தவரே
ஊட்டிய தாயைவிட்டு
உடன்பிறந்தோர் பாசம்விட்டு
நாட்டினை காக்க வந்தீர்
நாயகராகி விட்டீர்
உலகினில் சிறந்தவரே
உயிர்கொடை தந்தவரே
உணர்வுடன் வருகின்றோம்
உங்கள் நினைவுடன் கலக்கின்றோம்.
பூக்களை சொரிகின்றோம்
பாதங்கள் தொழுகின்றோம்-இந்த
பூமியில் கடவுளென்றால்-உங்கள்
பெயரையே சொல்கின்றோம்..
த.யாளன்