எனக்கும் வேண்டும் விடுதலை !
இளைஞனே,
எங்கே விரைந்து செல்கின்றாய்;
என்னைப் பின்னே விட்டுச் செல்கின்றாய்.
கைகளில் மென்வளையலும்
கழுத்தில் தங்க வடமும்
உடலில்
தளிர்பட்டுச் சேலையும்
அமுத்தும் சுமைபினால் நான்
சோர்ந்து போனேன்.
போதையூட்டும் காதல் வாழ்க்கை கனவுகள்
தெவிட்டி விட்டது எனக்கும்.
பொட்டிட்டு பூவைத்து என்னை
அழகு பார்த்து சிறை வைத்ததும் போதும்.
இந்நாட்டின் வீர மக்களை
என் வயிற்றில் சுமந்தேன்.
உன் வயல் வெளிகளில்
உன்னுடன் வியர்வை சிந்தினேன்.
எம் மண்ணின் விடுதலைப் பயணத்தில் நான்
உன்னுடன் கூட வரலாகாதோ?
அன்பனே,
எனக்கும் வேண்டும் விடுதலை!
– வானம்பாடி –