மாவீரர் துணையோடு தேசப்பணி தொடர்வோம்….!
மறைந்தன நேற்றோடு
பாடுகள்
மலர்ந்தன இனிதே
வசந்மென்றே
பாடுகுயிலே
கடமைகள் கண்ணெதிரே
எழுந்தன
இலட்சியக் கனவுகள்
துளிர்விட்டன
இனி புறப்படுவே ாம்
மனதில்
உறுதிபூண்டு உரிமை
வெல்ல
இந்த வருடம்………..
தலைவனின் வருகை
இருந்திடல் வேண்டும்
தமிழர் தலைகள்
நிமிர்ந்திடல் வேண்டும்
புலிகள் படையெடுப்பு
நிகழ்ந்திடல் வேண்டும்
புனிதர் கனவுகள்
மலர்ந்திடல் வேண்டும்
மாண்ட மாவீரம்
மீண்டெழல் வேண்டும்
மானம் மண்ணில்
நிலை நாட்டிடல் வேண்டும்
துரோகத்தின் தலை
அறுபடல் வேண்டும்
துயரமில்லா வாழ்வு
பிறந்திடல் வேண்டும்
வானில் புலிக்கொடி
பறந்திடல் வேண்டும்
மகிழ்ச்சிக் கடலில் தாய்மண்
குளித்திடல் வேண்டும்
இத்தனையும் நிகழ்ந்திட
புதிய ஆண்டின் நாளில்
மாவீரர் தெய்வங்களை
வணங்கி ஆசிபெற்று
தேசப்பணி தொடர்வோம்.
கவியாக்கம் : நாகதேவன் தமிழீழம்.