நாங்கள் உங்களைப் போல் அல்ல………..
நாங்கள்
உங்களைப்போல் அல்ல
முற்றும் மாறுதல்
கொண்டவர்கள்
உங்களைப் போல்
பட்டுடுத்தி
வண்ணங்கள் மின்ன
அரிதாரம் பூசி
அழகுப் பதுமைகளாய்
உலாவந்தவர்கள்
அல்ல
வரிகள் தரித்து
புலியாகி
வாழ்வின் வசந்தங்கள்
மறந்து
இளமையின் கனவுகளைச்
சுருக்கி
இதயத்தில் விடுதலையை
சுமந்து வாழ்ந்தவர்கள்
சமையல் கட்டில்
அகப்பை பிடித்து நின்றவர்கள்
நாங்கள் அல்ல
துவக்கைப் பிடித்து நின்றோம்
பாசறையில்
போர்பயிற்ச்சியை
முடித்து
முல்லைத்தீவில்
பகையின்
முதுகெலும்பை முறிச்சம்
கிளிநகரில்
நார் நாராய் கிழிச்சம்
கேட்டுப்பார்!
சிங்களப்பொடியன் சொல்லுவான்
புலி நங்கையரின்
தீரத்தை
பஞ்சணைகளில் படுத்துறங்கியதுமில்லை
மாடிமனை வீடுகட்டி வாழ
ஆசை கொண்டதுமில்லை
பனைகளை பிளந்து
வீடுசமைத்து
வாழ்விடங்கள் ஆக்கிக்கொண்டோம்
காவலரண்களை
கேலிக்கைக்காய்
படகில் பணித்தவர்கள்
நாங்கள் அல்ல
கந்தகம் சுமந்தவண்டியில்
எங்கள் உயிரை நிரப்பி
வெடித்தவர்கள்
சலங்கைகள் அணிந்ததில்லை
சங்கீதங்கள் கேட்டதில்லை
சுட்டு விழும்
சன்னங்களில் ஓசையில்தான்
எங்கள் பொழுதுபுலர்கிறது
தங்கமாலை சூட
ஆசையில்லை
அதனால் கழுத்தில்
நஞ்சுமாலை
கட்டிக்கொண்டோம்
கண்ணாடி முன்நின்று
அழகை இரசித்ததில்லை
கண்டிருப்பார் உலகத்தார்
மலரும் தேசமதில்
உயரும் புலிக்கொடியில்
எங்கள் அழகுமுகந்தனை
தாயவளோடு
அவள் வீரக்குழந்தைகளையும்.
எழுத்துருவாக்கம் : நாகதேவன் தமிழீழம்.