நிலவொளி வீசும் என் தாய்நிலத்து அழகு…
தென்னைகள் இரண்டு
ஒன்றோடு ஒன்றுரசி
காதல் செய்ய
ஓலையின் இடுக்கூடே
மெல்ல எட்டிப்பார்க்கிறாள்
என் தாய்நாட்டை
நிலவுமகள்
முற்றத்தில் நான்
படுத்திருக்க
முந்ததைய நாட்களின்
நினைவுளை
என்னுள்
மீட்டிச் செல்கிறாய்
படகுகள் கரையோரம்
தரித்து நிற்க்கும்
தனியழகை
கடலில் விழுந்து தோன்றும்
நிலவில் காண்
ஒளியே இல்ல
வெட்டைக்காட்டில்
இருளகற்றும்
இவளின் அழகை
கடலில் சன்னதங்கள்
ஆடிய பின்
சகநண்பர்களுடன்
படகின் நடுவே நின்று
இரசித்ததுமுண்டு
நிலவொளி வீசும்
என் தாய்நிலத்து அழகை
காவல்வேலியில்
காத்திருக்கும்
காவியவீரர்களுக்கு
ஒளியொன்று
நீ கொடுத்தாய்
முகம் மறைத்த
புலிவீரரின்
வேவுப்பயணத்திற்க்கு
வழித்துணையாகி
வழிநடந்தாய்
நிலம் மீள
நிரையாகி இங்கே
நீளமும் வீரரின்
நினைவிடங்களில்
ஒளிதீபமாகி
வானத்தில் இருந்து
தேசஒளி ஒன்று ஏற்றுகிறாய்
நிலவொளி வீசும்
என் தாய்நிலத்து அழகே
நிலவுப்பழம்
தொங்கும் அந்த
இரவின் பனைமரம்
நினைவில் நின்றாடும்
அழகுத் தமிழீழமண்ணில்
புலியின் கொடியேறும்
நாளை எண்ணி எண்ணி
காத்திருக்கு என்மனம்.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.