அன்றொரு நாள் அவர்கள் வருவார்கள்

In தாயக கவிதைகள்

அன்றொரு நாள் அவர்கள் வருவார்கள்

என்றொரு நாள்
எம் மக்கள்
எதிர்பார்க்கும்
அன்றொரு நாள்
அவர்கள் வருவார்கள்

அன்னை நிலம் காயும்
அசுத்தமாய் ஆறு பாயும்
திண்ணை மனை
எல்லாம் தினம் தினம்
பிணம் வீழும்
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

மெல்லவாய் தமிழ் சாகும்
மெதுமெதுவாய் உயிர் போகும்
சிங்களம் குடி ஏறி
சிதைக்கும் தமிழ் வாழ்வை
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

கன்றுகளைப் பசு தின்னும்
பசு முலையை நாய் உண்ணும்
நரிகள் உயிர் கொண்டு
நாடேல்லாம் பிணம் ஆகும்
அன்றொரு நாள் அவர்கள் வருவார்கள்

காவலுக்கு நின்ற வேலி
கட்டாயம் பயிர் மேயும்
ஆவலாய் பகை வந்து
ஆன்மாவை பங்கு போட
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

கர்ப்பிணி பெண் கூட
கற்பிழந்து கதறிடுவாள்
நற்றமிழ் நிலம் எங்கும்
நரி நடனம் ஆடி நிற்க
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

பிஞ்சுகள் கருகி விழும்
பிதிர்கள் உருகி அழும்
சிதையுண்டு தமிழ் மெல்ல
புதையுண்டு போகாது
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்.

நிச்சயம் நடக்கும் இது
நியம் சொல்லும் வரிகள் இது
பயம் போக்கி தமிழ் வாழ்வு
பண்போடு மேல் ஓங்க
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

கற்பனை கதை மற்றும்
கனவில் வந்த கவிதை அல்ல
சிங்கள நரி நாய்கள்
சிதைக்கும் எம் இனத்தை
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்.

வென்றொரு நாள்
வந்துங்கள் கண்முன்னே
வித்தாய் விதையுடலாய்
விடுகதையாய்
அன்றொரு நாள் அவர்கள் வருவார்கள்

உலகம் வியந்து நிற்க
உணர்வுகள் உறைந்து நிற்க
தேசம் வென்றுங்கள் கையில்
தருவதற்கே
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

காற்றாய் கரி மருந்தாய்
கந்தகம் பூசியதாய்
தோற்றமே அறியாது
உன் துயர் தீர்க்க
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்..

இருந்து பார் இது நடக்கும்
மருந்துக்கு வழி இன்றி
மனை எங்கும் பகை கிடக்கும்
சிதறும் பகைக் கலங்கள்
சிதை வீழும் படைக் குகைகள்
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

துரோகம் புரிந்த வீரர்
தலைகள் நாய் நக்கும்
விரோத போக்கு எல்லாம்
விழிகள் பிதுங்கி நிற்கும்
அன்றொரு நாள் அவர்கள்
வருவார்கள்

திருந்து நீ திருந்தி விட்டால்
தினம் வெற்றி பெற்றிடலாம்
திசைகள் நான்கினிலும்
விசை விட்டு பறந்திடலாம்

..கவிப்புயல் சரண்..

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.