தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப்போராட்டமும்!
(சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 29)
திம்புப் பேச்சுவார்த்தையும் – இந்தியாவின் திட்டமும் – தலைவர் பிரபாகரன் கைதும்
இத் சிறப்பு வரலாற்று நெடுந் தொடரில் கடந்த பாகங்களில் இந்திய தமிழீழப்போர் பற்றி பாத்து வருகின்றோம் அதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் தலைவர் பிரபாகரன் அவர்களையும் தமிழீழ மக்களையும் இந்திய அரசின் மீது சினம் கொள்ள வைத்ததும் பின்னாட்களில் தமிழீழ மண்ணில் இந்திய படைகள் பாரிய இழப்புக்களை சந்திக்க தொற்றுவித்த மிகமுக்கியபான நிகழ்வு பற்றியும் இந்த பதிவில் பார்த்துவிட்டு தொடர்ச்சியாக இந்திய தமிழீழப்போர் பற்றி விரிவாக பார்ப்போம்.
ராஜிவ் காந்தியின் தலைமையில் இந்திய அரசுஇலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை தன் விருப்பத்திற்குஏற்ப கையாளத் தொடங்கி, ஈடுபட்டுவந்த நிலையில் தமிழீழவிடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் போட்டு, 1985இன்ஆரம்பத்திலிருந்தே தலைவர் பிரபாகரன் அவர்களின்தலைமையில் கெரில்லா நடவடிக்கைகளில் 1985 ஆனி18இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப்படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டின் ஆடிமாத முற்பகுதியில்இந்திய அரசின் மத்தியத்துவத்தின் கீழ் பூட்டான் தலைநகர்திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
சகல தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன. தமிழர் தேசியம்தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்றஅடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின்தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கவேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையைமற்றைய தமிழ் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக்கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது. இப்படியாகச்சிக்கலடைந்த திம்புப் பேச்சு வார்த்தைகள், போர்நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும்வவுனியாவிலும் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலையில்200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து முறிவடைந்தன.
இந்நேரத்தில் தமிழீழத்தில் தன் தளபதிகளுடன் தலைவர்பிரபாகரன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை பற்றியநிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்துதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டார்.
இதனால் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் இந்தியஅரசுக்கும் இடையில் பாரிய முரண்பாடும் இடைவெளியும்ஏற்பட்டது. ஆனால் இந்தியா பற்றிய தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை தலைவர் பிரபாகரன் பின்வருமாறுகூறியிருக்கிறார். “எமக்கு இந்தியாவின் உதவியும்நல்லெண்ணமும் அவசியம். அதே வேளையில் இந்தியாதனது தீர்வைத் தமிழீழ மக்கள் மீது திணிப்பதை நாம்விருப்பவில்லை. தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முழுஉரிமையும் எமது மக்களுக்கு உண்டு” என்று.
ஆனால் இந்திய அரசும் அதன் பிரதமரும் தலைவர் பிரபாகரன்அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலையில் எவ்வளவுஉறுதியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல்அப்போதைய தமிழக முதல்வருக்கு அழுத்தங்களைக்கொடுத்து, 1986ம் ஆண்டு ஐப்பசியில் தமிழக காவற்துறைமூலம் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த தகவல்தொடர்புச் சாதனங்களைப் பறித்தார்கள். தலைவர்பிரபாகரனையும் மற்றைய போராளிகளையும் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிகளை நடத்துவதுபோன்று நடத்தினார்கள்.
தொடரும்…
✍️ஈழம் புகழ் மாறன்.