நிகரில்லா நிலமகள்
உன்னன்பை எடுத்துக்கூற
உறங்காது யோசித்தேன்
கல்கியின் நாவல்களை
கரைத்தும் குடித்தேன்
வரலாற்றுச் சுவடுகளை
வரிசையாய் படித்தேன்
வார்த்தைகள் கிட்டாது
வாயடைத்து நின்றேன்!
எழிலரசி இளவரசியே
போரிசை இன்னிசையே
விடுதலை உயிரோவியமே
செங்கதிர் ஒளிக்கீற்றே
தமிழ் வீரத்தின் நியவுருவே
ஒப்பில்லா கலையரசியே
நிகரில்லா நிலமகளே
நினைவில் நிலைத்தவளே!
ஈழம் புகழ் மாறன்